Saturday, July 25, 2009

ஓர் வாக்காளரின் ஆதங்கம்

மறதி ஒன்று இருப்பதால்தான்
மனிதன் வாழ முடிகிறது .
வாக்குறுதிகளை மறப்பதால் தான்
வாக்குறுதிகள் தரப்படுகின்றன.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
வார்த்தை என்னவோ கட்டித்தேன் .
வாழ்க்கை மட்டும் எட்டிக்காய் .
ஆண்டவர்கள் நிலை என்ன?
ஆள விட்டவர்கள் நிலை என்ன ?
ஞாபகம் தெரிந்த நாள் முதல்
ஞாபகம் மறக்கும் நாள் வரை
தெரிந்தவர்கள் இறப்பை எண்ணிவிடலாம் .
ஆட்சியில் சம்பாதிதவர்களை என்ன முடியுமா ?
நமது பொருளாதார கொள்கை
பணக்காரன் மேலும் பணக்காரன்
ஏழை மேலும் ஏழை
எப்படி எழ்மை ஒலியும்
எந்த ஆட்சி வந்தால்
ஏற்ற தாழ்வுகள் அகலும்
சாதிமத சண்டைகள் ஒலியும்
அரசு துறைகள் திருந்தும்
வாக்குகளைப் பெற்றவரிடம்
வாக்குறுதிகள் என்னவாயிற்று என்றால்
"சொல்லுதல யாருக்கும் எளிய - அரியவாம்
சொல்லியவண்ணம் செயல் " என
திருக்குறளைக் காட்டுவர்
வாக்கலாரகிய நாமும்
" இன்னா செய்தாரை ஒருத்தல் -அவர் நானா
நன்னயம் செய்துவிடல் " என ,
திருக்குறள் படி நடந்து
வாக்களிக்கும் கடமையை செய்வோம்
வாக்களிக்கும் பாவிகள் .!!!
வெந்ததை தின்போம்,
விதி முடிந்தால் சாவோம் !!!!!!


Saturday, May 16, 2009

கருவறைக்குள் ....











வெளியே ஓயாத ஒப்பாரி
செவிப்பறை கிழிக்கும் குண்டுகள் ..!

உதைக்கும் பூட்ஸ் கால்கள்
நெஞ்சினில் பதிய
பழகி போனது அலறல் சத்தம் ...!

உள்ளே நானும் வெளியே என் தாயும்
பிறந்த மேனியாய் சிலநாள் ....


தமிழனாகப் பிறப்பது
அத்தனை பெரிய குற்றமா ?!

எனக்காகவே உயிர் வாழ் கின்றலாம்
வயிற்றை தடவிக் அழுது கொண்டே
அடிக்கடி சொல்கிறாள் அம்மா

பனிக்குடம் உடைய
பத்து நாட்களே பாக்கியாம் ...

வெளியே வந்தும் என்ன பயன் , அம்மா?
என்னையும் ஒருநாள்
கொல்லத்தானே போகிறார்கள் !

மிச்சமுள்ள நாட்கள்
கொடுரமாய் நீள்வதற்கு பதில்
நச்சுக் கொடி என் கழுத்தை
இன்றே இருக்கிடக் கூடதா ??
- நன்றி
பொன். திருமலை
ஜூனியர் விகடன்





Monday, May 11, 2009

யோசிப்போர் சாங்கம் (வேறு எங்கும் கிளைகள் கிடையாது)



எனக்கு ஒரு சந்தேகம்...
நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?-

நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்


வடி கட்டின கஞ்சத்தனம்
சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.

உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.

இன்றைய தத்துவம்
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்ஆனா,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.-

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இன்றைய தத்துவம் 2
என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,

அதால,டிகிரி வாங்க முடியாது!!!

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்
யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர

நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு,

குளுரா இருந்தாலும் குளிக்கனும்.

அஞ்சு மணியாய்டும்.

அம்மா, அப்பா, அக்கா யாரையாவது

எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க.

டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.

ஆறு மணிக்கு கிளம்புங்க.

ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

குங்குமம்
குங்குமம் - இந்த வாரம்

சந்தனம் - அடுத்த வாரம்!!!

மொழி'பெயர்ப்பு'
ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?தெரியலையா?!?!நான் பார்க்க நான் பார்க்க நான்உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!

நாட்ட்ட்ட்டாமை....
பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான் என்றோம்ல!!

நாட்டாமை : ?!?!

டப்பிங் படங்கள்
உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)

சர்தார்
ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?

சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.

ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!

சர்தார் : அட, சூப்பரா இருக்கே!

நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?

நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.

சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.


சர்வே
தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில்"நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?"என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது.

அந்த சர்வேயின் முடிவுகள் கீழே.

7.53% - ஆம்.0% - இல்லை.92.47% -

நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல

சர்தார்
கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

சர்தார்
ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?

சர்தார் : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

சர்தார்ஜி
பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?

கோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

கரப்பான்
மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன.

அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது.

உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன. ஏன் தெரியுமா?.................................................................... ............................................ஏன்னா, அது "HIT" ஸாங்!!!

குறுக்கே
ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

இன்றைய தத்துவம் 3
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி
அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.

இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! "ஓலை sending failed" என்று திருப்பியனுப்பிவிடு.

இது யார் சொத்து?
போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?

சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்.

Friday, May 8, 2009

49 ஓ !

அநேகமாக நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே கூட்டணியில் இருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.(அவர்கள் எப்போதுமே மக்கள் விரோதக் கூட்டணியில்தான் இருந்து வருகிறார்கள் என்பது இன்னொரு விஷயம்.)
ராஜபக்ஷேவுடன் சேர்ந்துகொண்டு ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தின் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்தே தீருவோம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், அந்தக் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க கூட்டணியில் இருக்கிறார்.
ஒருத்தரையருத்தர் ஒழித்துக் கட்ட விரும்பும் இரு கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு வாக்காளர்களிடம் கூட்டாக பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரும் நிகழ்ச்சி இந்திய வரலாற்றிலேயே இப்போதுதான் முதல்முறை நடக்கிறது. பகையாளியை உறவாடிக் கெடுக்கும் உத்தியோ என்னவோ...
கேட்டால் காங்கிரசுக்கு தி.முகவுடன்தான் கூட்டு; வி.சியுடன் இல்லை என்பார்கள். வி.சிக்கு தி.மு.கவுடன்தான் கூட்டு; காங்கிரசுடன் இல்லை என்பார்கள்.
இதே லாஜிக்படி வி.சி.யுடனும் காங்கிரசுடனும் பா.ம.க கூட்டு வைத்துக் கொள்ளலாம். ஆனால் தனக்கு தி.மு.கவுடன் கூட்டு இல்லை என்று சொல்லலாம். பா.மா.கவுடன், வைகோவும் இடதுசாரிகளும் கூட்டு வைத்துக் கொள்ளலாம். ஆனால் தங்களுக்கு காங்கிரசுடன் உறவு இல்லை என்று சொல்லலாம். காங்கிரசுடன் கூட்டு வைக்கும் பா.ம.கவுடன் ஜெயலலிதா கூட்டு வைக்கலாம். மற்றவர்களுடன் உறவு இல்லை எனலாம்.
பாவம் பி.ஜே.பி. அவர்களும் காங்கிரஸ், இடதுகள் இருக்கும் இதே கூட்டணியில் ஜெயலலிதாவோடு மட்டும் கூட்டு வைத்துக் கொள்ள அனுமதித்துத் தொலைக்கலாம். விஜய்காந்த்தும் சரத் குமாரும் (அரசியலில்) சின்ன வயசுக்காரர்கள். 2011 வரை காத்திருக்கலாம். இப்போது காசை வீணாக்க வேண்டாம்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆளுக்கு வெவ்வேறு 20 தொகுதிகளை எடுத்துக் கொண்டு , அந்த 20க்குள், தங்களிடம் சரணாகதி அடைந்திருக்கும் தமிழின, தேசிய, புரட்சி வீரர்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒன்று இரண்டு கொடுத்துவிட்டால், 40 தொகுதியிலும் போட்டியே இல்லாமல் தேர்தலை நடத்தி முடித்துவிடலாம்.
ஏராளமான பணமாவது மிச்சமாகும்.
அட வெட்கங்கெட்டவர்களே.....
என்ன கூட்டணி அமைக்கிறீர்கள் ? எந்தக் கொள்கையும் இல்லாமல், ஏன் ஒருவரையருவர் எதிர்க்கிறீர்கள் என்று எடுத்துச் சொல்ல ஒரு நியாயமான கொள்கை வேறுபாடும் இல்லாமல், சீட் பிடிப்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, ஏன் மக்களை இவ்வளவு கேவலமாக ஏமாற்றுகிறீர்கள் ?
இவர்களுடைய ஏமாற்று திட்டங்கள் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்ல. பின்னரும் தொடர்பவை. எந்த கட்சிக்கு எத்தனை சீட் கடைசியில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தேர்தலுக்குப் பின்னர் இன்னும் புதுப்புது கூட்டணிகளை உருவாக்கப் போகிறார்கள். ஜனநாயகத்தையும் தேசத்தையும் காப்பாற்ற நிலையான ஆட்சி தேவை என்பதால் இப்படி அணி மாற வேண்டியிருக்கிறது என்று அப்போது அதற்கும் ஒரு நியாயம் பேசுவார்கள்.
கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இந்தக் கட்சிகள் இப்போது செய்ய வேண்டியது என்ன ? ஒவ்வொருவரும் தனித்தனியே போட்டியிடவேண்டும். அவரவருடைய அசலான மக்கள் ஆதரவு, பலம் என்ன என்பதைக் காட்ட முன்வரவேண்டும்.
ஆனால் நிச்சயம் அப்படி இவர்கள் செய்யப் போவதில்லை.
இந்தச் சூழ்நிலையில் மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் ? இவர்கள் அத்தனை பேரையும் நிராகரிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
எப்படி நிராகரிப்பது ? தேர்தலன்று வீட்டிலேயே உடகார்ந்துகொண்டு நிராகரிப்பது தற்கொலைக்கு சமம். வாக்குச் சாவடிக்குப் போய் இவர்கள் அத்தனை பேருக்கும் எதிராக ஓட்டளித்து நம் நிராகரிப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
நல்லவேளையாக அதற்கு சட்டத்தில் அற்புதமான வழி இருக்கிறது. அதுதான் 49 ஓ !
வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்லவேண்டும். உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இதுதான் 49 ஓவைப் பதிவு செய்யும் முறை.
இதைச் செய்யக் கூடாது என்று நம்மை யாரும் & சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரதிநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.
ஏற்கனவே நரேஷ் குப்தா, தேர்தல் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் 49 ஓ பற்றியும் எடுத்துச் சொல்ல சென்ற தேர்தல் போதே உத்தரவிட்டிருக்கிறார்.அதனால் எந்த தேர்தல் ஊழியரும் இது எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. தவிர இந்த முறை சமூக ஆர்வலர் அ.கி.வேங்கடசுப்பிரமணியன் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுவின் பேரில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 49 ஓ பிரிவு பற்றிய சுவரொட்டியும் இடம் பெற இருக்கிறது.
தனியே போய் சாவடியில் பகிரங்கமாக 49 ஓ பதிவு செய்ய தயக்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வாக்குச் சாவடியில் 49ஓ பதிவு செய்ய விரும்பும் இதர நண்பர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் சந்தித்து ஒன்றாகப் போய் வரிசையில் நின்று 49 ஓ பதிவு செய்யுங்கள்.
தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் ஏழு வாரங்கள் இருக்கின்றன. கொள்கையில்லாமல் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொன்டு நம்மைத் தொடர்ந்து கொள்ளையடிக்கும் ஒரே நோக்கத்துடன் இயங்கும் அத்தனைக் கட்சிகளையும் நிராகரிக்க

கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்


வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்படலாமே?
· காலை 5 மணிக்கு எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்க படுக்கையை விட்டு 5 மணிக்கே எழலாமே!
· உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்று கஷ்டப்படலாமே!
· பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்க சமையல் என்கிற ஒன்றை அறிய அல்லது சமைக்க கஷ்டப் படலாமே...
நானும் அறிவேன் இது எல்லாருக்கும் பொருந்தாது என்று, இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்வோம் பிற்காலத்தில் மற்றவரை சார்ந்திராது இருக்க.
ஒழுங்கற்ற, எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.

சிரமங்கள் நம்மை பலப்படுத்துகின்றன.
கஷ்டங்கள் நம்மை வலுப்படுத்துகின்றன.
துயரங்கள் நம்மை உருவாக்குகின்றன
.

எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!

ஒரு காரியம் வெற்றியடைந்து விட்டால், 'நான் அப்படிச் செய்தேன் இப்படிச் செய்தேன் அதனால் தான் வெற்றி வந்தது' என்று குதிக்காதே. 'ஆண்டவன் அருளால் இந்த வெற்றி வந்தது' என்று அவனையும் பங்காளியாகச் சேர்த்துக் கொள்.

கஷ்டம் வந்து விட்டது எனறால் 'நான் தான் தவறு செய்து விட்டேன்' என்று வருந்தும் வேலையில்கூட, 'ஏதோ ஆண்டவன் கிருபை, இந்தக் கஷ்டம் இத்தோடு போயிற்று' என்று அமைதியடை.
இலாப நஷ்டங்களோ, நன்மை - தீமைகளோ உன்னால் தான் விளைகின்றன என்றாலும் அதற்குப் பின்னணியில் இருப்பது ஆண்டவனுடைய இயக்கமும் தான்.
பலரிடம் திறமை இருக்கிறது ஆனால் சிலருக்குத் தான் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்தச் சிலரிலேயும் மிகச் சிலர் தான் மிக வேகமாக முன்னேறுகிறார்கள், உலகப் புகழ் பெறுகிறார்கள்.அங்கும் ஆண்டவன் கிருபை இருக்கிறது.
இறைவனை நம்புகிறவன், இறைவனுடைய கருணையைய் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்.இறைவன் எப்போது வருவான் என்று ஆவலோடு இருக்க வேண்டுமே தவிர, இறைவனை நொந்துகொள்வதில் அர்த்தமில்லை.
இறைவனை அடைய விரும்புவோர், இறைவனும் தானும் ஒன்றே என்கிற உணர்வை முதலில் பெற்றாக வேண்டும்.

ந‌ல்ல‌தையே நினை, ந‌ல்ல‌தையே செய். உன்னில் இறைவ‌னை நீ காண்பாய்!

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!

Wednesday, May 6, 2009

ஆட் கொல்லி நோய்



இது இன்றைய தேதியில்


உலகை பயமுறுத்தி கொண்டு இருக்கும


ஓர் ஆட் கொல்லி நோய்.


நண்பர்களே என் இனிய தமிழர்களே


இந்த நோய் முதியவர்களை விட


இளைய வயதினரையே அதிகம் தாக்குகின்றது .



ஆகவே வெளிநாட்டு வேலையில் இருக்கும்


என் இனிய தமிழர்களே


உங்களையும்


காத்து உங்கள் நண்பர்களையும் காத்து


இன் நோய் பரவாமல் இருக்க


எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் .

Sunday, May 3, 2009

இலங்கை தமிழர்கள்


இலங்கை தமிழர்கள் நிலைமை இந்த மீன் போல ஆகி விட்டது .
சொந்த நாட்டில் உயிர் வாழ
அவர்கள் சிந்து கின்ற ரத்தம் வெள்ளமா உருவெடுத்து ஓடுகின்றது .
இது என்று முடியும்????????

இது யாருக்கு தெரியும் ?

ஆண்டவனுக்கா ?

இல்லை

அரசியல் வாதிக்கா?

சும்மா ஒரு லு லு லு

சமன்பாடு - 1
மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்
ஆக முடிவாக என்னான்னா, மனுஷனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 2
ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 3
பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.
ஆகவே இறுதியாக,

சமன்பாடு 2, 3 இலிருந்து,
ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்
அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.ஆகவே, முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்..முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
அப்படீன்னா,
ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,
சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!

Wednesday, April 22, 2009

எனக்கு புரியவில்லை....


ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோம் என்கிறார்கள்;ஆனால் ஈழத்து தமிழ் மக்கள் மீதும் எமது குழந்தைகள் மீதும் தூவப்படும் மரண குண்டுகளில் அவர்கள் பெயர்களைப் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். பிணங்களை காப்பாற்றி ஈழத்தில் எதை சாதிக்கப் போகிறார்கள்?{ பிணந்தின்னிக் கழுகுகளின் இரையே பிணங்கள் தான் என்பதை மறந்துவிட்டு என்ன இது முட்டாள் தனமான கேள்வி?}மரமேறி விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம். அப்பிடி இருக்கு இந்திய அரசின் ஒப்பனை வசனங்கள். ஒரு பக்கம் அம்மா வயதான ஐயாவுக்கு கடிதம் எழுதுகிறாராம் தீர்வு காணவும் போரை நிறுத்தவும் வலியுறுத்துவோம் என்று... இன்னொரு பக்கம் நச்சு வாயுவையும், எரி குண்டுகளையும் எதிர்க்கு பரிசளிப்பாராம். பார்த்துக் கொண்டிருக்கும் வெளி உலகில் மனித மூளை சுமந்து இரத்தம் ஓடும் நரம்புகளால் பின்னப்பட்ட இரு கை கால் பிறப்புகள் அப்படியே நம்பிவிடுமாக்கும்... கை கொட்டி சிரிக்க வருகிறது....விரக்தியின் விளிம்பில் சிரிக்கத் தானே முடியும்??? அவர் வயோதிபர் ;அரசியல்வாதி;அவருக்கு குடும்பம் இருக்கிறது; நாம் யார் அவருக்கு?? அவரால் என்ன செய்ய முடியும்? அவரை நம்பியா எமக்கு சுதந்திரம் வேண்டி போராட்டத்தை தொடக்கினோம் அல்லது போராட்டத்தை ஆதரித்தோம்?நாம் தானே எமக்கான போராட்டத்தை தொடக்கினோம்? நாங்கள் தானே எங்கள் பிள்ளைகளையும், சகோதரர்களையும் போராளிகளாக்கினோம்? வளர்த்தோம்?போராளிகள் என்பவர்கள் என்ன வேற்றுக்கிரகத்தில் இருந்தா வந்தார்கள்? அவர்களை பெற்றவர்களும் ஈழத் தமிழர்கள் தான். அவர்களை போராடச் சொன்னவர்களும், அவர்களுடைய போராட்டத்துக்கு வழியமைத்துக் கொடுத்தவர்களும், அவர்களை வளர்த்தவர்களும் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தான். எங்களுக்கான விடியலுக்கு நாங்கள் எங்களை காக்க எங்களுக்காக எங்களால் உருவாக்கப்பட்டவர்கள் தான் போராளிகள். அவர்கள் மட்டும் எமக்குப் போதும் .. அவர்களோடு எமது எதிர்காலம் இருக்கட்டும்; இல்லையேல் அவர்களோடு சேர்ந்து செத்து மடியலாம்... ஈழத்தமிழராகவே செத்து மடியலாம்..என்ன நடந்துவிடப் போகிறது இனிமேல் இத்தனை நாள் நடந்ததை விட பெரிதாக...??ஒருவர் ஈழத்தமிழருக்காக சாகும் வரை உண்ணாவிரதமிருப்பேன் என்பார்; இரண்டு நாளில் அதைக் காலவரையற்ற உண்ணாவிரதமாக்குவார்; இன்னும் இரண்டு நாளில் பலரின் வேண்டுகோளுக்காக உண்ணாவிரதத்தை முடித்தேன் என்பார். அதையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை தவிர ஈழத்தமிழனால் என்ன செய்ய முடியும்??இன்னொருவர் உதவுவதாக அரசியல் கூத்துக் கட்டின போது அவரது முதலைக் கண்ணீரை நம்பியதும் எமது தவறு தான். அவர் உதவவில்லை என்றதும் அவரை தூற்றினாலும் நமது தவறு தான். இந்த தவறுகளை நாம் இன்னொரு தடவை செய்யாதிருக்க முயற்சிக்கலாம் , எங்கள் போராட்டத்தையும் உயிர் அவலங்களையும் இவர்களும் கையிலெடுத்து அரசியல் செய்யாமலிருக்கட்டும்....! எங்களை வைத்து உடன்பிறப்புகளுக்கு கவிதை எழுதுவது எப்படி என்று புளுகாமல் இருக்கட்டும். எங்கள் அவலங்களும் மரண ஓலங்களையும் வைத்து தேர்தலில் வாக்குக் கேட்காமல் இருக்கட்டும். இழந்து போகும் மவுசை திரும்ப தேரில் ஏற்ற எந்த அரசியல்வாதியும் ஈழத் தமிழன் என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருக்கட்டும்.அட விடுங்கப்பா...யாருமே உதவவில்லையென்றே தீர்மானித்துவிட்டோம்... உதவப் போவதில்லை என்பதும் தெரியும்...நாங்கள் என்ன எங்கள் போரளிகளுக்காக ஆயுதம் கேட்டோமா? இல்லையே... !! எங்கள் சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுகிறோம்...எங்கள் வழியில் தடைக்கல்லாக ஏன் நிற்கிறீர்கள் என்று தானே ஆரம்பத்திலிருந்து இந்தக் கணம் வரை கேட்கிறோம்....??அட போங்கப்பா....யாருமே உதவவில்லையென்றால் ...என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...அங்கு? துடிக்க துடிக்க மரணத்தை ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொருவராக வீழ்ந்து சாவைத் தழுவப் போகிறீர்கள்..அவ்வளவு தானே?? சாவுங்கள்...செத்து போங்கள்... ஈழத்தமிழர்களாகவே செத்துத் தொலையுங்கள்... உங்கள் சாவு வீடுகளால் இன்னொரு தேசத்தின் இறையாண்மையை காப்பாற்றிய பெருமை உங்களுக்குக் கிடைக்கட்டும்... செத்துத் தொலையுங்கள் ஈழத்தமிழராகவே....என்ன நடந்துவிடப் போகிறது....பெரிதாக...?அங்கு சாவது யார் ...? திரைப்பட நடிகர்களா அல்லது பெரிய பெரிய அரசியல்வாதிகளா? வெறும் ஈழத் தமிழன் தானே?? உங்களுடைய உயிருக்கு என்ன மதிப்பிருக்கிறது? அற்ப உயிர்கள் தானே? பைசா பெறுமா உங்கள் உயிர்?? நீங்கள் உயிரோடு இருந்து என்ன சாதித்துவிடப் போகிறீர்கள்...?? தேர்தல் காலங்களில் ஓட்டு வாங்க உதவலாம் உங்கள் செத்தவீடுகள்... போய் செத்து தொலையுங்கள்....ஈழத்து தமிழராகவே செத்து தொலையுங்கள்... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக....??மனுசனாய் பிறந்தால் எண்டைக்கோ ஒரு நாள் சாக வேண்டிய விதி தானே? எல்லாரும் ஒன்றாய் செத்து தொலையுங்கோ.. ஈழத் தமிழராகவே செத்துத் தொலையுங்கள்...பெருமையுடன்...!. ஒரு வகையில் நிம்மதியடையலாம் சாகும் போது குடும்பத்தோடு சாகிறீர்களே என்று. ஒரு வகையில் பெருமைப்படலாம் பிறந்த மண்ணில் ஈனர்களுக்கு பணியாமல் சுரணையுள்ள தமிழராய் சாகிறீர்களே என்று. ஒரு வகையில் பெருமையாக சாகலாம்... உங்கள் உரிமைகளை பிளாஸ்டிக் குடங்களோ, சில நூறுத் தாள்களோ விலை பேசாமல் சுயமான உணர்வுடன் சாகிறீர்கள் என்று...ஒரு வகையில் பிராத்தனையுடன் சாகலாம் இன்னொரு பிறப்பிலும் ஈழத்தமிழனாய் பிறந்து மடிய வேண்டும் என்று. ...!ஏன் என்றால் உலகில் தனது இனத்தின் சுதந்திரத்துக்காக இத்தனை போராடியவனும், எத்திக்கிலிருந்தும் எந்த பிரதியுபகாரமும், உதவியும் கிடைக்காது அகதியாய் போனவனும் , சர்வதேசத்தால் மனிதாபிமானம் அற்று கைவிடப்பட்டவனும் ஆனால் கடைசி மூச்சு வரை தனி நாட்டின் மகத்துவத்தை முற்றிலும் சரியான புரிந்துணர்வோடு இருப்பவனுமானவன் அல்லவா அந்த தேசத்திலேயே கிடந்து மடியும் ஈழத்தமிழன்? அப்படி ஒரு ஈழத்தமிழனாய் இருப்பது பெருமைக்குரியது, எல்லாவற்றையும் விட...செத்து தொலையுங்கள் ஈழத்தமிழராகவே... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...??என் தேசத்தில் இந்தக் கணம் மரணத்தை சுவாசிக்கும் என்னருமை சோதரங்களே... உங்களுக்காக புலம் பெயர்ந்த எமது கண்களில் இனிமேல் கண்ணீர் வராது. மாறாக உங்கள் ஒவ்வொருவருடைய மரணமும் எமது மனதில் வேரோடிப் போகும். எந்தவொரு பசப்பு வார்த்தைகளாலும் இனிமேல் ஏமாறமாட்டோம்.. இனியொரு உண்ணாவிரத நாடகத்தையோ , மனிதச் சங்கிலியையோ அல்லது இன்னொரு கவிதையையோ பார்த்து நம்பிக்கையோடு வாய் பார்த்து ஏமாற மாட்டோம்..! யாராவது அல்லது எந்த தேசமாவது உங்களைக் காப்பாற்ற வருவார்கள் என்று நம்பி ஏமாற மாட்டோம்...உங்களுக்கு நாங்களும், எங்களுக்கு நீங்களும் மட்டும் தான்...! உங்களுக்காக எங்களது உயிரை சருகாக்கி , தெம்பிருக்கும் வரை எந்த வழியிலும் நாம் போராடுவோம்...! புலம் பெயர்ந்த இடத்திலிருந்தே உங்களை எப்படியாவது காப்போம்.. இல்லையேல்... பரவாயில்லை செத்துத் தொலையுங்கள்... ஈழத்தமிழர்களாகவே....செத்துப் போங்கள்....என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...??வாழ வேண்டும், வாழப் போகும் வாழ்கையை சுதந்திரமாக வாழ வேண்டும்; அகதியாயும் அடிமையாயும் வாழ்வைதை விட நாம் எல்லோருமே செத்துப் தொலைந்து போய்விடலாம்..ஈழத்தமிழராகவே.... என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...??உலகம் ஏதாவது செய்யும், எமது மரணம் எதையாவது செய்ய இவர்களை தூண்டும் என்று முட்டாள்தனமாக நம்பி தம்மைத் தாமே தீக்கிரையாக்கின முத்துகுமார்களுடன் சேர்ந்து நாமும் செத்து தொலைஞ்சு போய்விடலாம்... ஈழத்தமிழராகவே...என்ன நடந்துவிடப் போகிறது பெரிதாக...?இனி எவரும் ஈழத்தமிழனுக்காக அழ வேண்டாம்; அவன் மானத்துடன் செத்துப் போகிறான்... அவனுக்காக நீலிக் கண்ணீரோ, போலி மாரடிப்போ வேண்டாம். எங்கள் சாவிலாவது நீங்கள் உங்கள் சாலங்களை புறந்தள்ளி வையுங்கள் அரசியல்வாதிகளே!!!